இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதை அந்நாட்டு ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசு வழங்கி கௌரவித்தார்.

இந்த விருதினை வழங்கிய சைப்ரஸ் அரசுக்கும், சைப்ரஸ் மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இதன்போது நன்றி தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”இந்தியாவிற்கும், சைப்ரஸ் நாட்டிற்கும் இடையே நல்ல உறவுகள் உள்ளன. இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்பணிக்கிறேன்.

அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கௌரவத்தை மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,சைப்பிரஸ் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் கனேடிய பிரதமர் மார்க் கார்னி அழைப்பிற்கிணங்க ஜி-7 உச்சி மாநாட்டிலும் கலந்துக்கொள்கிறார்.

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக

5480e5b4-dfa4-4a08-8cf0-c65a4c6f2f28

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை – எம்.பிக்கள் குற்றச்சாட்டு!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தவிசாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக ஆசனம் ஒதுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,