ஆர்ஜென்டீனாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 6 ஆண்டுகள் சிறை!

ஆர்ஜென்டினாவின் முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றத்திற்காக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பொதுப் பதவியிலிருப்பதற்கான வாழ்நாள் தடை விதித்து ஆர்ஜென்டினா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2007-2015 வரை இரு தடவை அவரது பதவிக்காலத்தில் வீதிக் கட்டுமான ஒப்பந்தங்களை தமக்கு சாதகமான நிறுவனமொன்றுக்கு வழங்கிய மோசடியில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டினடிப்படையில் 2022 இல் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து கிர்ச்னரும் அவரது வழக்கறிஞர்களும் குறித்த வழக்கிற்கு எதிராக ஆர்ஜென்டினா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இதேவேளை இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்த ஆர்ஜென்டினா உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து கிறிஸ்டினா பெர்னாண்டஸ்டி கிர்ச்னருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பொதுப் பதவியிலிருப்பதற்கான வாழ்நாள் தடை விதித்து நேற்று (10) தீர்ப்பளித்துள்ளது.

IMG-20250624-WA0013

“பிரஜாசக்தி” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஜூலை 04 ஆம் திகதி ஆரம்பம்!

சமூகத்தை வலுவூட்டல் மற்றும் பொருளாதார நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “பிரஜாசக்தி” தேசிய

IMG-20250624-WA0012

வெலிகந்த, நெலும்வெவ வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பகுதியை அபிவிருத்தி செய்யத் திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, வெலிகந்த நெலும்வெவ பிரதேசத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பிரதேசத்தை அபிவிருத்தி

images (11)

தேசபந்துவின் துர்நடத்தை தொடர்பாக மேலும் நால்வர் சாட்சி!

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம்