டெல்லியில் முதல்வர் பதவியேற்பைத் தொடர்ந்து ஆறு அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்களுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில், 48 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க., 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, யார் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என 10 நாட்களாக குழப்பம் நிலவி வந்த நிலையில், டெல்லியில் மத்திய பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் நடந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் ரேகா குப்தா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆகியோர் முன்னிலையில் டெல்லியின் முதலமைச்சராக ரேகா குப்தாவுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.