அமெரிக்க சுற்றுலாத்துறையை புறக்கணிக்கும் கனேடியர்கள்!

அமெரிக்காவுக்கு வீதி மார்க்கமாக சுற்றுலா செல்லும் கனேடியர்கள் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்திலிருந்து 35.2 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதேவேளை ஆகாய மார்க்கமாக அமெரிக்கா செல்லும் கனேடியர்களின் எண்ணிக்கையும் 20 சதவிகிதம் குறைந்துள்ளது.

கனேடியர்கள் அமெரிக்காவை புறக்கணிப்பதன் விளைவை அமெரிக்கா அனுபவிக்கத் தொடங்கிவிட்டதாக பயண நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்க விமான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் எல்லையிலுள்ள கடைகளுக்கு கனேடிய டொலர்கள் வடிவில் வரும் வருவாய் பெருமளவில் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதே நேரத்தில், கனடாவின் சுற்றுலாத்துறைக்கு வருமானம் கணிசமாக அதிகரித்துவருகிறது.

2020க்கு முன், அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதில் முக்கிய இடம் பிடித்தவர்கள் கனேடியர்கள் என்ற நிலை இருந்தது. ஆகவே, தற்போது கனேடியர்கள் அமெரிக்காவை புறக்கணிப்பதால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அமெரிக்கர்களால் நன்கு உணர முடிகிறது.

இதேவேளை கனேடியர்களின் அமெரிக்க புறக்கணிப்பு, நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடும் என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள்.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு