அமெரிக்காவில் தொடரும் சோகம்;வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரையில் 43 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் 15 குழந்தைகள் உள்ளதாகவும், மேலும் 27 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 850 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும், ஏனைய நிவாரண சேவைகளுக்கும் அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதேநேரம் வெள்ளத்தில் சிக்கிய சுமார் 850 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நிவாரணக் குழுக்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பெருமளவிலான குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் அங்கு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலரும் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

07.17.01

ராஜபக்‌ஷர்களுடன் வம்பிலுத்த கனேடிய மாகாண முதல்வருக்கு கொலை மிரட்டல்!

பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்

download (5)

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில்

74ca9f53-2025-48bf-8ae8-09650e4277e6

வடக்கின் தொழில் பயிற்சி நிலையங்களில் வௌி மாகாணத்தவர்களே அதிகம் கற்கிறார்கள்!

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக