அமெரிக்காவின் மிரட்டல் பலிக்காது : சீனா தெரிவிப்பு!

அமெரிக்காவின் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்கப்படுவதாக சீனா தெரிவித்தது.

வரி விதிப்பு குறித்து சீனாவுடன் அமெரிக்கா நடத்த விரும்பும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக சீன வெளியுறவு அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சீனாவின் வெளியுறவு அமைச்சரகம் கூறியதாவது, வரி விதிப்பு மற்றும் வர்த்தகப் போரைத் தொடங்கியது, அமெரிக்காதான். அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அதில் நேர்மைத்தன்மை இருக்க வேண்டும்.

அந்நாட்டின் தவறான நடைமுறைகளைச் சரிசெய்வது, சீனா மீது மட்டுமான ஒருதலைபட்ச வரிவிதிப்பு ஆகிய பிரச்னைகளில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எந்தவொரு பேச்சுவார்த்தையிலும், அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச வரிவிதிப்பு நடவடிக்கைகள் சரி செய்யப்படாவிட்டால், அது அந்நாட்டின் நேர்மையின்மையைத்தான் குறிக்கும்; அதுமட்டுமின்றி, அந்நாட்டின் மீதான நம்பிக்கையைக் குறைக்கும்.

மேலும், பேச்சுவார்த்தையின்போது, வற்புறுத்தலோ மிரட்டலோ சீனாவிடம் பலிக்காது என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகக் கூறி, சீனாவைத் தவிர்த்து, மற்ற நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

மேலும், அமெரிக்காவுக்கு எதிராக சீனா செயல்படுவதாகக் கூறி, சீன பொருள்களுக்கு மட்டும் 245 சதவிகிதம்வரையில் வரியை அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்தது. இதற்கு பதிலடியாக, அமெரிக்கா மீது சீனாவும் வரி விதிப்பை அறிவித்தது.

இதனிடையே, வரிவிதிப்பு குறித்து, தன்னிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறினார்.

இருப்பினும், அவ்வாறு எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று சீன வெளியுறவு அமைச்சரகம் மறுத்துள்ளது.

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த

download (32)

டொராண்டோவில் கடும் வெப்பம்!

டொராண்டோ (Toronto) நகரில் வெப்ப அலை தொடரும் நிலையில், டொராண்டோ மாவட்ட பாடசாலைகள் குழுமம் (TDSB) பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்றை